இரு குருடர்களின் காதல் காவியம்
தேவதை பிறப்பாளா? காற்று பலமாக அடிக்கிறது மரங்களின் கிளைகள் கூட உடைந்து விடும் அளவுக்கு காற்று அடிக்கிறது அதே வேகத்தில் மழைத்துளிகள் கூரை மீது விழ மழை பெரிய சத்தத்துடன் பெய்து கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் சர்மிலன் வீட்டில் மனைவியுடன் ஒன்றாய் கூடி நின்று மழையின் அகோரத்தை ரசித்தவண்ணம் கதைத்துக் கொண்டிருந்தான். சர்மிலனை பொறுத்தவரை மிகப் பெரிய பணக்காரன் அறிவில் சிறந்தவன் பீலன் நகருக்கு வரும் போது வெறும் கையுடன் தான் வருகை தந்தான் எனினும் இன்று மிகப் பெரிய பணக்காரன் என்றால் அது அவனின் புத்திசாலித்தனமும் விவேகமும் எனக் கூறலாம். அவளின் மனைவி மிகப்பெரிய அழகி அவளது நடையும் உடையும் நளினமும் உடல் அசைவுகளும் அவளை அழகியாக்கியது. அழகென்றால் வெள்ளையா தான் இருக்க வேண்டுமா பொது நிறமாக இருந்தாலும் அது அழகு தான் என்பதற்கு இவள் ஒரு சாட்சி. உரத்த மழையின் முன் கணவனும் மனைவியும் ரசித்த நின்றிருக்க தன் கணவன் அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். மஞ்சள் நிறப்புடவை விரித்த கூந்தல் காற்றில் அங்குமிங்கும் அசைவதும் தோடுகள் காற்றுடன் இசைபாட அவன் உதடுகள் சிரித்த நிலையில் கோவைப